சென்னை : சென்னை கிண்டி பன்னோக்கு மருத்துவமனையில் பணிபுரிய நடக்கவிருந்த கலந்தாய்வு திடீரென ரத்து செய்துள்ளனர். கலந்தாய்வுக்கு அழைத்து விட்டு பின்னர் ரத்து செய்ததால் செவிலியர்கள் அதிருப்தி அடைந்தனர். பன்னோக்கு மருத்துவமனை திறப்புவிழா நாளை நடக்க உள்ள நிலையில் தேதி குறிப்பிடாமல் கலந்தாய்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.