Thursday, September 19, 2024
Home » பங்காருபேட்டை தாலுகாவில் டிராகன் புரூட் விளைவித்து ரூ.16 லட்சம் சம்பாதிக்கும் விவசாயி

பங்காருபேட்டை தாலுகாவில் டிராகன் புரூட் விளைவித்து ரூ.16 லட்சம் சம்பாதிக்கும் விவசாயி

by Karthik Yash

தங்கவயல்: விவசாயத்தில் லாபம் இல்லாததால், விளைநிலங்களை விற்று, விவசாயிகள் வேலை தேடி நகரங்களுக்கு செல்லும் நிலையில், பெரும்பாலான விவசாயிகள் வறட்சியான நிலத்தில் விவசாயம் செய்ய தயங்குகின்றனர். ஆனால் பங்காருபேட்டை தாலுகாவில் உள்ள காமசமுத்திரத்தை சேர்ந்த விவசாயி நாராயணப்பா இதற்கு விதி விலக்காக திகழ்கிறார். இவர் தனக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் நிலத்தில் டிராகன் புரூட் என்ற அயல்நாட்டு பழத்தை வளர்த்து ஆண்டுக்கு ரூ.15 முதல் ரூ.16 லட்சம் வரை லாபம் ஈட்டியுள்ளார். இரண்டு ஏக்கரில் மூவாயிரம் டிராகன் புரூட் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. மாநிலத்தின் பெங்களூரு, மங்களூரு, விஜயப்பூர், அண்டை மாநிலமான தெலங்கானாவில் உள்ள ஐதராபாத், மகாராஷ்டிராவின் சாங்லி மற்றும் கோலாப்பூர் ஆகிய நகரங்களுக்கு இங்கிருந்து பழங்களை சப்ளை செய்து வருகின்றனர்.

ஒரு கிலோ பழத்தின் சந்தை விலை ரூ.100 முதல் ரூ.200 வரை உள்ளது. சில சமயங்களில் தேவைக்கேற்ப விலை மாறுபடும். டிராகன் புரூட் பயிர் நோயால் பாதிக்கப்படுவது குறைவு. விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் தண்ணீரின் அளவும் குறைவாக உள்ளது. பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தத் தேவையில்லை. எனவே, வறட்சியால் வாடும் நாட்டு விவசாயிகளுக்கு இந்தப் பழப்பயிர் பணப்பயிர் என்கிறார் நாராயணப்பா. இந்த பயிருக்கு செலவு குறைவு. அதுமட்டுமின்றி, இயற்கை வேளாண்மை முறையை பின்பற்றி, சொந்தமாக தயாரிக்கப்பட்ட இயற்கை உரத்தை பயன்படுத்துகிறோம். குறிப்பாக, விவசாய கழிவுகளை ஒன்றாக சேர்த்து அதில் மண்புழுக்களை விடுகிறோம். இப்படி 40 நாட்களில் மண்புழு உரத்தில் பயிருக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கிறது.

டிராகன் புரூட் ஆழமான இளஞ்சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்துடன் இரண்டு சாகுபடிகளைக் கொண்டுள்ளது. அவற்றில், ஆழமான இளஞ்சிவப்பு டிராகன் பழத்திற்கு விலை அதிகம். உடல் நலத்திற்கும் நல்லது. இதற்கு சந்தையில் அதிக தேவை உள்ளது என்று கூறப்படுகிறது. இந்த பயிர் நடவு செய்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பலன் தரும். ஒரு செடியில் ஒரு அறுவடைக்கு குறைந்தது 50 முதல் 70 பழங்கள் கிடைக்கும். ஆண்டுக்கு ஆண்டு பராமரிப்பு குறைந்து லாபம் இரட்டிப்பாகிறது’ என்கிறார் விவசாயி நாராயணப்பா.

You may also like

Leave a Comment

1 × three =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi