இந்தநிலையில் 3 கட்டிடங்கள் தற்போது அங்கு செயல்பட்டு வருகின்றன. இதில் பழைய ஓடு போட்ட கட்டிடத்தை அகற்றியபோது அங்கிருந்த சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. இதனால் அடிக்கடி பள்ளிக்குள் விஷப் பாம்புகள் புகுவதால் மாணவர்கள் பள்ளிக்கு வருவதற்கு அச்சப்படுகின்றனர். இதுகுறித்து ஆசிரியர்கள், பெற்றோர்கள் பள்ளியைச் சுற்றி சுற்றுச்சுவர் மற்றும் கூடுதல் கட்டிடம் கட்டித் தர வேண்டும் என 3 முறை எம்எல்ஏவிடம் மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆரணி ஆற்றங்கரை அருகே இப்பள்ளி அமைந்துள்ளதால் மழைக்காலங்களில் ஆரணி ஆற்றில் தண்ணீர் கரை புரண்டு ஓடும்போது மாணவர்கள் தண்ணீரை வேடிக்கை பார்க்கச் சென்றால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மாணவர்கள் நலன் கருதி பள்ளிக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்றனர்.