அரிவாளுடன் ரகளையில் ஈடுபட்ட ஊராட்சி மன்ற உறுப்பினர் கைது

சுரண்டை: தென்காசி மாவட்டம் சுரண்டையை அடுத்த சேர்ந்தமரம் அருகேயுள்ள குலசேகரமங்கலம் இந்திரா காலனியை சேர்ந்த சுப்பையா மகன் வேல்சாமி (43). இவர் குலசேகரமங்கலம்‌ 1 வது வார்டு உறுப்பினராக உள்ளார். இவரது தங்கை குடும்பத்தினருக்கும், அதே கிராமத்தைச் சேர்ந்த அவரது உறவினர்களுக்கும் சொத்து தகராறு இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில் நேற்றுமுன்தினம் எதிர்தரப்பினர் சேர்ந்தமரம் மெயின் பஜாரில் பஸ்சுக்கு காத்திருந்தனர். அப்போது அங்கு வந்த வேல்சாமி அவர்களை அவதூறாக பேசியது மட்டுமின்றி அரிவாளை காட்டி கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளார்.

ஆனால் அவர்களது உறவினர் இது தொடர்பாக ேபாலீசில் புகார் அளிக்கவில்லை.இந்நிலையில் வேல்சாமி‌ அரிவாளுடன் ரகளையில் ஈடுபட்ட வீடியோ சமுக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இதைதொடர்ந்து தென்காசி மாவட்ட எஸ்பி சுரேஷ்குமார் உத்தரவின் பேரில் குலசேகரமங்கலம் கிராமத்தை சேர்ந்த செல்வம் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் வேல்ச்சாமியை சேர்ந்தமரம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

Related posts

சிறப்பு புலனாய்வு குழுவினர் முன் ஹத்ராஸ் சம்பவத்தின் ஒருங்கிணைப்பாளர் சரண்: போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கி 5 பத்திரிக்கையாளர்கள் உள்பட 29 பேர் பலி