இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவர், மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்தார். அதன்பேரில், காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன், புகார் குறித்து விசாரணை மேற்கொண்டு அறிக்கை அளிக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பித்திருந்தார். சிவாக்கம் ஊராட்சியில், ஊராட்சி மன்ற தலைவர், துணை தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்களிடம் துறை சார்ந்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
பின்னர், தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 பிரிவு 204 (3ன்) கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில், காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சிகளின் ஆய்வாளராக உள்ள மாவட்ட கலெக்டர், பூசிவாக்கம் ஊராட்சி மன்ற தலைவராக உள்ளவர்களுக்கு 6 மாத காலத்திற்கு கிராம ஊராட்சியின் நிர்வாகம் மேற்கொள்ளும் சிறப்பு அதிகாரம் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவு பல்வேறு பிரச்னைகளுக்கு மத்தியில் தவித்து வரும் ஊராட்சி மன்ற தலைவர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளன.