Saturday, October 5, 2024
Home » பாமக பிரமுகருக்கு அரிவாள் வெட்டு

பாமக பிரமுகருக்கு அரிவாள் வெட்டு

by Karthik Yash

கடலூர்: கடலூரில் பாமக பிரமுகரை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டியதில், படுகாயங்களுடன் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கடலூர் சூரப்ப நாயக்கன் சாவடியை சேர்ந்தவர் சிவசங்கர் (43). பாமக பிரமுகரான இவர், வன்னியர் சங்க முன்னாள் நகர செயலாளர். இவருக்கு தனலட்சுமி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். இந்நிலையில் நேற்று மதியம் வீட்டில் சிவசங்கரும், மனைவி தனலட்சுமியும் இருந்தனர். அப்போது அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் 4 பேர் புகுந்தனர். அவர்களை பார்த்ததும் சிவசங்கர் தப்பி ஓட முயன்றார். அதற்குள் 4 பேரும் அவரை மடக்கி தலை, கழுத்து, கை உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டினர்.

இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். இதை பார்த்த மனைவி தனலட்சுமி அலறினார். அக்கம்பக்கத்தினர் வருவதற்குள் 4 மர்ம நபர்களும் தப்பி சென்று விட்டனர். இதையடுத்து சிவசங்கரை கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு ஆபத்தான நிலையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது குறித்து திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிந்து தப்பி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2021ம் ஆண்டு சிவசங்கரின் தம்பி ஆட்டோ டிரைவர் பிரபு தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

3 × 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi