பரமத்திவேலூர்: நாமக்கல் மாவட்டம், ஜேடர்பாளையம் அருகே கரப்பாளையத்தில், கடந்த மார்ச் 11ம் தேதி இளம்பெண் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக, போலீசார் 17வயது சிறுவனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதையடுத்து அங்கு தொடர் வன்முறை நடந்து வந்தது. இந்நிலையில் போலீஸ் பாதுகாப்பையும் மீறி கடந்த 9ம் தேதி, சவுந்தராஜன் என்பவரது தோட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாக்கு மரங்களை மர்ம நபர்கள் வெட்டி சாய்த்தனர். 10க்கும் மேற்பட்ட தோட்டங்களில் பம்பு செட் குழாய்களை சேதப்படுத்தினர். இதையடுத்து ஜேடர்பாளையத்தில் 14 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு, துப்பாக்கி ஏந்திய போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்பகுதியில் காவல் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் அலட்சியமாக செயல்பட்டதாக கூறி, போலீஸ் எஸ்எஸ்ஐ சுப்பிரமணி, போலீசார் ராமராஜ், ஜனார்த்தனன் ஆகியோர் நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.