இதனைத் தொடர்ந்து கடந்த 26 நாட்களாக மணல் குவாரி மூடப்பட்டு விற்பனை நிறுத்தப்பட்டிருந்தது. இதனால் வீடு கட்டுவோர் மணல் கிடைக்காமல் கட்டிடப் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டு அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில், மீண்டும் நேற்று முதல் இந்த மணல் குவாரி திறக்கப்பட்டு மணல் விற்பனை மீண்டும் தொடங்கியது. இதனால் வீடு கட்டுவோர், கட்டிட தொழிலாளிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.