பல்லாவரம் தொகுதியில் உள்ள 3 கோயில்களுக்கு எப்போது கும்பாபிஷேகம் நடத்தப்படும்: பேரவையில் இ.கருணாநிதி எம்எல்ஏ கேள்வி


சென்னை: பேரவையில் கேள்வி நேரத்தின் போது பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி (திமுக) பேசுகையில், ‘‘குரோம்பேட்டை பிரசன்ன யோகா ஆஞ்சநேயர் கோயில், பெருமாள் கோயில், பொழிச்சலூர் அகதீஸ்வரர் கோயில் ஆகியவற்றுக்கு கும்பாபிஷேகம் எப்போது நடத்தப்படும்,’’ என்றார். அமைச்சர் பி.கே.சேகர்பாபு: அகத்தீஸ்வரர் கோயிலுக்கு திருப்பணிகள் மேற்கொள்ள மண்டல குழு, மாநில குழு ஒப்புதல் பெறப்பட்டு விரைவில் திருப்பணிகளை மேற்கொள்வதற்கு துறை ஒப்புதல் வழங்கும்’’ என்றார்.

Related posts

உத்தரப்பிரதேசத்தில் ஆன்மிக நிகழ்வின் கூட்ட நெரிசலில் சிக்கி 122 உயிரிழப்பு: தலைவர்கள் இரங்கல்

அமாவாசை மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்

பவானிசாகர் அணை நீர்மட்டம் 66 அடியாக உயர்வு