திருப்பூர்: பல்லடம் நால்வர் கொலை வழக்கில் போலீசில் சரணடைந்த முக்கிய நபரான வெங்கடேஷ், தப்பி ஓடும் போது துப்பாக்கியால் சுட்டுப் பிடிக்கப்பட்டார். கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்களை பதுக்கி வைத்த இடத்தை, காட்ட அழைத்துச் செல்லும் போது தப்ப முயன்றதால், இரு கால்களிலும் சுட்டுப் பிடித்த போலீசார் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர்.