திருப்பூர்: பல்லடம் செட்டிபாளையம் பகுதியில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடை இன்று முதல் செயல்படாது என பல்லடம் தாசில்தார் அறிவித்துள்ளார். செட்டிபாளையம் பகுதியில் செயல்பட்ட வந்த டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் போராட்டம் நடத்தி வந்தனர். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று பிரச்சனைக்குள்ளான டாஸ்மாக் கடை இன்று முதல் செயல்படாது என்று தாசில்தார் அறிவித்தார்.