பழவேற்காடு: பழவேற்காடு ஏரியில் இறங்கி காங்கிரஸ் கட்சியினர் கருப்பு கொடி ஏந்தி ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மீனவர்களின் வாழ்வாதாரத்தை சீரழிக்கும் இலங்கை அரசையும் அதனை தடுக்காத ஒன்றிய அரசையும் கண்டித்து முழக்கமிட்டு வருகின்றனர். பொன்னேரி காங்கிரஸ் எம்எல்ஏ துரை.சந்திரசேகர் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.