மதுரை: பழனி முருகன் கோயிலில் கிரிவல பாதையில் ஆக்கிரமிப்பை முற்றிலும் அகற்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோதமாக செயல்படும் வணிகரீதியான அனைத்து வியாபார நடவடிக்கையை முற்றிலும் அகற்ற ஆணையிடப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்ற அனைத்து நடவடிக்கையையும் எடுக்க கோயில் ஆணையர், வருவாய்த்துறைக்கு உத்தரவிடப்பட்டது. ஆக்கிரமிப்பு அகற்றப்படுவதை கண்காணிக்க ஓய்வுபெற்ற நீதிபதி வீ.பாரதிதாசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.