திருப்பதியில் இருந்து காட்பாடி, சேலம், திண்டுக்கல், பழநி, பொள்ளாச்சி மற்றும் கோவை வழியாக 8 ரேக்குகள் கொண்ட வந்தே பாரத் விரைவு ரயிலை அறிமுகம் செய்ய வேண்டும். இதனால் பக்தர்கள், மாணவர்கள், தொழிலதிபர்கள், விவசாயிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் என தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களுக்கு பயணிக்கும் அனைத்து தரப்பினரும் பயனடைவர்.
இதுபோல் பழநி வழித்தடத்தில் ராமேஸ்வரம், கன்னியாகுமரி, கொச்சின், பெங்களூரு உள்ளிட்ட ஊர்களுக்கும் தினசரி ரயில் இயக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.