மதுரை: பழனி நகராட்சியில் அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள 487 கடைகளை அகற்ற எடுத்த நடவடிக்கை என்ன? என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. பழனி நகராட்சி, மாவட்ட நிர்வாகம் தரப்பில் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக எந்த நிகழ்வும் நடத்தப்படவில்லை என மாவட்ட ஆட்சியர், நகராட்சி நிர்வாகம் தரப்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. பழனி முருகன் கோயில் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.