சென்னை: தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே சாலை விபத்தில் காயமடைந்தவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார். விபத்தில் பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சம், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50000 வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். பாலக்கோடு அருகே ஜெர்த்தலாவ் கிராமத்தில் நேற்று மாலை 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் 21 பேர் காயமடைந்தனர்.