வனத்துறையினர் பட்டாசு வெடித்து யானையை வனத்துக்குள் விரட்டி அடித்தனர். இருப்பினும் சிறிது நேரத்தில் வனத்தை விட்டு வெளியேறிய யானை அருகில் உள்ள குடியிருப்புகளில் புகுந்து அங்குள்ள தென்னை, வாழை, மா, பலா மரங்களை துவம்சம் செய்தது. நெல்லியாம்பதி மலை சாலையில் வாகனங்களை வழிமறித்து வாகனங்களில் வருபவர்களை அச்சுறுத்தியது. இதனால் நெல்லியாம்பதிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைந்து விட்டது. தொடர்ந்து அட்டகாசம் செய்து வரும் சில்லிக்கொம்பன் யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வேண்டும் அல்லது வனத்துக்குள் விரட்டியடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.