பாலக்காடு அருகே காரில் கடத்திச் செல்லப்பட்ட ரூ.1.80 கோடி கருப்பு பணம் பறிமுதல்: இருவர் கைது

கோவை: கோவையில் இருந்து கேரளா சென்ற காரில் ஹவாலா பணம் கடத்தப்படுவதாக கேரளா போலிசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து பாலக்காடு நெடுஞ்சாலையில் வந்த கார் ஒன்றை கேரளா போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். காரின் பின் இருக்கையின் அடியில் கட்டுக்காட்டாக பணம் இருந்தது சோதனையில் தெரியவந்தது. இதனை அடுத்து உரிய ஆவணங்கள் ஏதும் இல்லாததால் காரில் மறைத்து வைத்திருந்த ரூ.1.80 கோடி பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். காரில் பணம் கடத்தி வந்த முகமது நிசார் மற்றும் முகமது குட்டி ஆகியோரை போலீசார் கைது செய்தனர் .

Related posts

ரூ.4 கோடி பறிமுதல் வழக்கு பாஜக பொருளாளர் ஆஜராக ஆணை

செல்போன் கட்டண உயர்வை ஒரே மாதிரியாக அறிவித்தது எப்படி?.. செல்போன் வாடிக்கையாளர்கள் மீது ரூ.35,000 கோடி சுமை: ஒன்றிய அரசுக்கு காங்கிரஸ் கண்டனம்..!!

வரதட்சணை கொடுமை வழக்கில் 7 ஆண்டு சிறை..!!