இந்நாளில் இஸ்லாமியர்கள் சிறப்புத்தொழுகைகள் நடத்தப்படுவதோடு புத்தாடை அணிந்தும், தங்கள் வீட்டிகளில் ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவற்றை இறைவனின் பெயரால் பலியிட்டு அவற்றை மூன்று சம பங்குகளாக பிரித்து, ஒரு பங்கை அண்டை வீட்டாருக்கும், நண்பர்களுக்கும் மற்றொரு பங்கை ஏழைகளுக்கும் கொடுத்துவிட்டு மூன்றாவது பங்கை தங்கள் தேவைகளுக்கு பயன்படுத்துகின்றனர். இதனை ஈகைத் திருநாள் என்றும் கூறுவர்.
மேலும் பண்டிகையை கொண்டாடும் விதமாக இன்று சென்னையில் இருந்தும், பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் போக்குவரத்துக்கு கழகம் சார்பில் சென்னையில் இருந்து தமிழகத்தின் முக்கிய இடங்களுக்கு கூடுதலாக 400 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. கோவை, மதுரை, நெல்லை, திருச்சி, சேலம் மற்றும் பெங்களூருவில் இருந்தும் 400 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.