இந்தியாவின் எந்த பகுதியையும் பாகிஸ்தான் என அடையாளப்படுத்தக் கூடாது: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் அதிரடி

டெல்லி : இந்தியாவின் எந்த பகுதியையும் பாகிஸ்தான் என அடையாளப்படுத்தக் கூடாது என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார். கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதியின் சர்ச்சை கருத்து விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் கூறுகையில், “இந்தியாவின் எந்த பகுதியையும் பாகிஸ்தான் என அடையாளப்படுத்தக் கூடாது, அப்படி அழைப்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை. அது தேசத்தின் ஒற்றுமைக்கு எதிரானது. பாலினம் சார்ந்த கருத்துகளை ஒரு சாதாரண கண்ணோட்டத்தில் வெளியிடும்போது அது சமூகத்தில் ஆணாதிக்க, பெண் வெறுப்புக் கருத்தாக பிரதிபலிக்க வாய்ப்பு உள்ளது எனவே, அதில் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நீதிமன்ற நடவடிக்கைகளை கண்காணிப்பதில் சமூக ஊடகங்கள் அதிக பங்கு வகிக்கும் பட்சத்தில் நீதிபதிகளின் கருத்துக்கள் நீதிமன்றத்தின் மாண்புடன் ஒத்துப்போக வேண்டியது அவசியம்,”இவ்வாறு தெரிவித்தார்.

Related posts

உலக சுகாதார அமைப்பின் கணக்கெடுப்பின்படி 44 கோடி பேருக்கு செவித்திறன் குறைபாடு

சுற்றுப்புறங்களை பசுமையாக மாற்றிட பொதுமக்கள் மரக்கன்றுகள் நட வேண்டும்

பழனி பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு: இயக்குனர் மோகன் மீது பழனி அடிவாரம் காவல் நிலையத்தில் மேலும் ஒரு புகார்.! போலீசார் விசாரணை