பாகிஸ்தானில் இருந்து ஈராக் சென்ற பேருந்து கவிழ்ந்து 28 பேர் பலி

டெஹ்ரான்: பாகிஸ்தானின் தெற்கு சிந்து மாகாணம் லர்கானா நகரை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட ஷியா யாத்ரீகர்கள் ஈராக் நோக்கி பேருந்தில் சென்று கொண்டிருந்தனர். இந்த பேருந்து மத்திய ஈரானின் யாஸ்டில் மாகாணத்தில் நேற்று முன்தினம் இரவு சென்று கொண்டிருந்தது. அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் இருந்த யாத்ரீகர்கள் 28 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் காயமடைந்த 23 பேரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

Related posts

நடிகைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் ஹேமா கமிட்டி முழு அறிக்கை விசாரணைக் குழுவிடம் ஒப்படைப்பு: முக்கிய நடிகர்கள் மீது நடவடிக்கை பாயுமா?

டென்மார்க்கில் நடந்த உலக தடகளப்போட்டியில் தமிழக தீயணைப்பு வீரர் 4 தங்கம் வென்று சாதனை

பாஜக செயற்குழு உறுப்பினராக இருந்த முன்னாள் எம்.பி. மைத்ரேயன் அதிமுகவில் இணைந்தார்!