நாட்டை அல்லது அரசின் ஆட்சியாளர்களை அரசை எதிர்க்கிற திறாணியற்றவராக தான் நமது மோடி பத்தாண்டு காலத்தை கடத்தியுள்ளார். அருணாசல பிரதேசத்தில் நமக்கு சொந்தமான பகுதிகள் நதிகளை தங்கள் தேசத்திற்கு உட்பட்ட பகுதிகள் என சீனா அரசு அறிவித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் காங்கிரஸ் இல்லாத பாரதத்தை கட்டமைப்போம். கழகங்கள் இல்லாத தமிழகத்தை கைப்பற்றுவோம் என பாஜ, தம்முடைய அரசியல் ஆதாயத்திற்கான அரசியலை மட்டுமே செய்து வருகின்றனர்.
பெரும்பான்மையான இந்து சமூகத்தினர், பாஜ இந்துக்களுக்கு விரோதமான கட்சியாக உள்ளது என உணர ஆரம்பித்து விட்டார்கள். கச்சத்தீவு விவகாரம் தமிழ்நாட்டு மக்களின் வாக்குகளை பறிப்பதற்காக அவர்கள் நடத்துகிற நாடகம். இதனை கைவிட்டு சீன அரசால் ஆக்கிரமித்து உள்ள இடங்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.