பாகிஸ்தானில் பயங்கர குண்டு வெடிப்பு: 2 குழந்தைகள் உள்பட 4 பேர் பலி

கராச்சி: பாகிஸ்தானில் நேற்று நடந்த பயங்கர குண்டு வெடிப்பில் 2 குழந்தைகள் உள்பட 4 பேர் பலியாகினர். பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் பலுசிஸ்தான் மாகாணம் உள்ளது. இந்த மாகாணத்தை தனி நாடாக அறிவிக்க கோரி ஆயுதம் தாங்கிய தடை செய்யப்பட்ட தெஹ்ரிக்-இ-தாலிபன் பாகிஸ்தான் என்ற அமைப்பு போராடி வருகிறது. காவல்துறையினர் மற்றும் பாதுகாப்பு படையினரின் நிலைகளை குறி வைத்து தொடர் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில். பலுசிஸ்தானின் பிஷின் மாவட்டம் சுர்காப் சவுக் அருகே உள்ள முக்கிய சந்தைப்பகுதியில் நேற்று சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பில் 2 குழந்தைகள், ஒரு பெண் உள்பட 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த 14 பேர் உடனே மீட்கப்பட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Related posts

‘பேச்சு பேச்சாத்தான் இருக்கணும்’ குப்பை கொட்டுவதை தடுக்க வடிவேலு பாணியில் சுவர் விளம்பரம்

காங்கயத்தில் வெறிநாய்கள் கடித்து 34 ஆடுகள் பலி : நிவாரணம் கேட்டு விவசாயிகள் போராட்டத்தால் பரபரப்பு

மணவாளக்குறிச்சி ஐஆர்இஎல் நிறுவனத்திற்காக 1144 ஹெக்டேரில் 59.88 மில்லியன் டன் மண் எடுக்க திட்டம்…