இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீதான வழக்கு விசாரணைக்கு இஸ்லாமாபாத் ஐகோர்ட் தடை விதித்தது. இம்ரான் கானை நேற்று விடுவித்த உச்சநீதிமன்றம், ஐகோர்ட்டில் இன்று ஆஜராக உத்தரவிட்டிருந்தது. கல்வி நிறுவன அறக்கட்டளை மோசடி தொடர்பான வழக்கில் கடந்த செவ்வாய்கிழமை கைதான இம்ரான் கான் நேற்று விடுதலை செய்யப்பட்டார்.