அந்த வகையில் காரமடையை அடுத்துள்ள தேக்கம்பட்டி பகுதியில் வசிக்கும் பத்மஸ்ரீ விருது பெற்ற பாப்பம்மாள் பாட்டி (108) தள்ளாத வயதிலும் ஆட்டோவில் தேக்கம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடிக்கு வந்து தனது ஜனநாயக கடமையை ஆற்றும் விதமாக வாக்கினை பதிவு செய்தார். இதுகுறித்து அவர் கூறும்போது, ‘‘அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பது ஜனநாயக கடமை. அதனை பிரதிபலிக்கவும், ஒரு வழிகாட்டி இருக்கவுமே வாக்களிக்க வந்தேன்’’ என்றார்.