தொடக்கத்தில் அந்த பகுதியில் டீக்கடை நடத்தி வந்த அவர், பிறகு இயற்கை விவசாயத்தின் மீது பற்று கொண்டு பணியாற்றி வந்தார். அந்த பகுதி விவசாய பெருமக்களுக்கு முன்மாதிரியாக திகழ்ந்தார். வயது முதிர்ந்த நிலையிலும் தொடர்ந்து மேற்கொண்ட இவரது பணியை கௌரவிக்கும் வகையில் 2021 ஆம் ஆண்டு ஒன்றிய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கியது. சமீபத்தில் நடந்த தி.மு.க. பவள விழாவில் அவருக்கு தந்தை பெரியார் விருது வழங்கப்பட்டது.
இளமை பருவம் முதல் திராவிட இயக்க கொள்கைகளை ஏற்றுக் கொண்டு தி.மு. கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டு தமது இறுதிக்காலம் வரை பணியை தொய்வின்றி மேற்கொண்டவர். அவரது மறைவினால் அவர் பிறந்த தேக்கம்பட்டி கிராமமே சோகத்தில் ஆழ்ந்திருக்கிறது. ரங்கம்மாள் (எ) பாப்பம்மாள் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.