உழவுத் தொழில் நின்றுவிட்டால் எல்லா ஆசைகளையும் துறந்து விட்டோம் என்கிற துறவிகளுக்கும் வாழ வழியில்லை என்ற திருக்குறள் தான் நினைவிற்கு வருகிறது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்த உதவும் கொள்முதல் விலையை உயர்த்த அரசு கொள்கை வகுக்க வேண்டும், முனைப்பு காட்ட வேண்டும். முதல்வர் மு.க.ஸ்டாலின் இதில் உடனடி கவனம் செலுத்தி, வருகிற சட்டமன்றக் கூட்டத் தொடரின்போது, நெல் கொள்முதல் விலையை உடனடியாக குவிண்டால் ஒன்றுக்கு 3,500 ரூபாய் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.