நெல்லை: நெல்லை மாவட்டம் ஏர்வாடியில் வரலாறு காணாத அளவுக்கு கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. கனமழை காரணமாக ஏர்வாடி பகுதியில் சாலைகளில் மழை வெள்ளம் ஆறு போல் ஓடுகிறது. தொடர் மழை காரணமக வீடுகள், கடைகளுக்குள் வெள்ளம் புகுந்தது. கனமழை காரணமாக மீட்புப் பணிக்காக நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு பேரிடர் மீட்புக்குழு விரைந்துள்ளது.