மேலும், இரு தினங்களாக தென்காசி, நெல்லை மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. கனமழை எச்சரிக்கை காரணமாக பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்ரீவைகுண்டம் தடுப்பணையில் இருந்து வினாடிக்கு 11,000 கனஅடி தண்ணீர் வெளியேறி வருகிறது. பாதுகாப்பு நடவடிக்கையாக ஸ்ரீவைகுண்டம் அணையில் மணல்வாரி மதகுகளை நீர்வளத்துறையினர் திறந்துள்ளனர். மேலும், மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்படி ஸ்ரீவைகுண்டம் தடுப்பணையின் கடையோர பகுதிகளின் வெள்ள அபாயம் குறித்து கண்காணித்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.