சென்னை: நெல்லையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலா ரூ.1 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார். அம்பாசமுத்திரம் வட்டம் அயன்சிங்கம்ப்பட்டி கிராமத்தை சேர்ந்த பேச்சிமுத்து, பேரின்பராஜா ஆகியோர் வயலுக்கு நீர் பாய்ச்ச சென்றபோது மின்வேலியில் சிக்கி மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர்