நெல்லையில் உரிமம் பெறாத விளம்பரப் பலகைகளை அகற்ற உத்தரவு..!!

நெல்லை: நெல்லையில் உரிமம் பெறாத விளம்பரப் பலகைகளை 7 நாட்களுக்குள் அகற்ற மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. விளம்பரப் பலகை, இரும்பு சட்டங்களை அகற்ற நெல்லை மாநகராட்சி ஆணையர் தாக்கரே சுபம் ஞானதேவ் உத்தரவிட்டுள்ளார். அப்புறப்படுத்தாத பலகைகளை நிர்வாகமே அகற்றி செலவுகளை சம்பந்தப்பட்டவர்களிடம் வசூலிக்கும். பலகைகளை அகற்றாதோர் மீது வழக்கு தொடர்ந்து 3 ஆண்டு சிறை அல்லது ரூ.25,000 அபராதம் விதிக்க வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Related posts

ஓடும் பேருந்தில் நடத்துனர் மயங்கி விழுந்து பலி

ஆப்கானிஸ்தானில் மிதமான நிலநடுக்கம்

வெடிகுண்டு தயாரிப்பு: இந்தியா புதிய சாதனை