அப்போது இரண்டு பைக்குகள் எதிர்பாராத விதமாக மோதியதில் ஆரோன் தூக்கி வீசப்பட்டு தலையில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ஜோ, விவசாயி போதிப் ஆகிய இருவரும் லேசான காயமடைந்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார், ஆரோன் உடலை கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த இருவரும் திசையன்விளை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். மேலும் இது குறித்து திசையன்விளை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.