இவர்கள் 4 பேரும் மருத்துவத்திற்காக நெல்லை நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றபோது பச்சநல்லூர் மேம்பாலம் அருகே முன்னாள் சென்று கொண்டிருந்த லாரியை முந்த முயன்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனம் லாரியின் சக்கரத்தில் மாட்டியதில் 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இது தொடர்பாக சம்பவ இடத்திற்கு விரைந்த பச்சநல்லூர் போலீசார் 4 பேரின் உடலை கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.