இந்நிலையில் நேற்று திருச்சியில் இருந்து பெரம்பலூருக்கு இருவரும் பைக்கில் வந்தனர். பாடாலூர் அருகே உள்ள பெருமாள் மலை எதிரே கட்டுப்பாட்டை இழந்து பைக் கீழே விழுந்தது. இதில் பின்னால் அமர்ந்து வந்த பிரியதர்ஷினிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
உடனடியாக சிறுவாச்சூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பிரியதர்ஷினி இன்று உயிரிழந்தார். இது குறித்து பாடாலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.