மேம்பாலத்தில் இருந்து விழுந்து தம்பதி பலி

விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே சித்தேரிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் காசிநாதன் (70). இவரது மனைவி வேம்பு (65). இவரை நேற்று அதிகாலை விருத்தாசலம் பேருந்து நிலையத்தில் இருந்து காசிநாதன் தனது மொபட்டில் வீட்டிற்கு அழைத்து சென்று கொண்டிருந்தார். புதுக்குப்பம் மேம்பாலத்தின் மீது வந்த போது, பின்னால் வேகமாக வந்த வாகனம் மொபட்டின் மீது மோதியது. இதில் வேம்பு சுமார் 20 அடி உயர மேம்பாலத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தார். படுகாயமடைந்த காசிநாதன் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்த விருத்தாசலம் போலீசார் வழக்குபதிந்து விசாரிக்கின்றனர்.

Related posts

நீட் விலக்கு சட்டத்துக்கு பிரதமர் உடனடியாக ஒப்புதல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: வில்சன் எம்.பி. வலியுறுத்தல்

துபாயில் முத்தமிழ் சங்கம் சார்பில் தமிழக வர்த்தகர்கள் சந்திப்பு

தென்மேற்கு பருவமழை நாடு முழுவதும் பரவியது