எங்கள் நட்பு எப்போதும் தொடரும்…சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் ரஜினி குறித்து அமைச்சர் துரைமுருகன் பேட்டி!

சென்னை: நடிகர் ரஜினி குறித்து நகைச்சுவையாகவே பதிலளித்தேன் என அமைச்சர் துரைமுருகன் சென்னை விமானநிலையத்தில் பேட்டி அளித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் நகைச்சுவையாக பேசிய நடிகர் ரஜினிகாந்த், பழைய மாணவர்களை சமாளிப்பது சாதாரணமானது இல்லை என்றும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சர்வசாதாரணமாக இதனை செய்கிறார் எனவும் கூறியுள்ளார். ரஜினிகாந்தின் இந்த பேச்சு தொடர்பாக அமைச்சர் துரைமுருகனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்க்கு பதிலளித்த அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது; சினிமாவில் மூத்த நடிகர்கள் எல்லாம் வயசாகி போய், பல் விழுந்து போய், தாடி வளர்த்து கடைசி காலத்திலும் நடித்துக் கொண்டிருப்பதால் இளைஞர்களுக்கு வாய்ப்பு இல்லாமல் இருக்கிறதா? அப்படித்தான்” என்று கூறியுள்ளார். அமைச்சர் துரைமுருகனின் இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த நடிகர் ரஜினிகாந்த், அமைச்சர் துரைமுருகன் கூறியதில் வருத்தம் இல்லை என்றார்.

இது குறித்து நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது: அமைச்சர் துரைமுருகன் எனது நீண்ட கால நண்பர்: அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும். துரைமுருகன் உடனான எனது நட்பு எப்போதும் போல தொடரும் என்று கூறியுள்ளார். பின்னர், இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அமைச்சர் துரைமுருகன் பேட்டி அளித்துள்ளார். அப்பொழுது அவர் கூறியதாவது; நாங்கள் எப்போதும் நண்பர்களாகவே இருப்போம். எங்களுடைய நகைச்சுவையை யாரும் பகைச்சுவையாக பயன்படுத்த வேண்டாம். நடிகர் ரஜினி குறித்து நகைச்சுவையாகவே பதிலளித்தேன் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

 

Related posts

வங்கியில் அடகு வைத்துள்ள நகையை மீட்டு தருவதாக கூறி நகை கடை உரிமையாளர்களை ஏமாற்றி பல லட்சம் அபேஸ் செய்த வாலிபர்: ஆன்லைன் ரம்மி விளையாட கைவரிசை

கொலை முயற்சி வழக்கில் 4 ஆண்டுகளாக வெளிநாட்டில் தலைமறைவான வாலிபர் கைது: சென்னை விமான நிலையத்தில் சிக்கினார்

வீட்டு வாசலில் தூங்கிக் கொண்டிருந்தபோது தலையில் கல்லை போட்டு மீன் வியாபாரி கொலை: 5 பேருக்கு வலை