பாலாற்று குடிநீர் நீரேற்றம் நிலையத்திற்கு செல்லும் சாலையில் பள்ளங்கள் நிறைந்து இருக்கின்றன. எனவே, பணிகளை முடிக்காமல், பாதியில் நிறுத்தப்பட்டுள்ள கால்வாய்களை கணக்கெடுத்து, மழைநீர் கால்வாய் அமைத்து தர வேண்டும். அப்பகுதியில் மழைக்காலங்களில் மழை வெள்ளம் தங்கு தடையின்றி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்பகுதியில் உள்ள கால்நடைகள் கால்வாய் பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாவதை தடுக்க, உடனடியாக கால்வாய் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.