நாமக்கல்: பறவைக் காய்ச்சலை தடுக்க நாமக்கல் பகுதிகளில் உள்ள கோழிப் பண்ணைகளை கண்காணிக்க 47 அதிவிரைவு படைகள் அமைக்கப்பட்டுள்ளது. அதிவிரைவு படையில் கால்நடை உதவி மருத்துவர்கள், உதவி ஆய்வாளர்கள், பராமரிப்புத்துறை உதவியாளர் உள்ளிட்டோர் உள்ளனர். 24 மணி நேரமும் கோழி பண்ணைகளை கண்காணிக்கும் பணியில் அதிவிரைவு படையினர் ஈடுபட உள்ளனர்