சென்னையில் உள்ள தனியார் மருத்துமனையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம், சுவாமிநாதன் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, சுவாமிநாதனின் உடல் உறுப்புகளை தானமாக வழங்க அவரது குடும்பத்தினர் முன்வந்தனர். அதன்பேரில், சுவாமிநாதனின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன. இதையடுத்து, பெரும்புதுார் ஆர்டிஓ சரணவக் கண்ணன், இறந்த சுவாமிநாதன் குடும்பத்தினரை நேற்று நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். மேலும், அரசு சார்பில் அவரது உடலுக்கு, மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.