உடல் உறுப்புகள் தானம் செய்த தனியார் நிறுவன ஊழியரின் உடலுக்கு அரசு மரியாதை

பெரும்புதூர்: பெரும்புதூரில் உடல் உறுப்புகள் தானம் செய்த தனியார் நிறுவன ஊழியரின் உடலுக்கு அரசு மரியாதை செய்யப்பட்டது. குன்றத்தூர் ஒன்றியம், படப்பை அடுத்த வைப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் சுவாமிநாதன் (35), தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி நிரஞ்சனா (30). இவர்களுக்கு 4 வயதில் ஒரு ஆண் குழந்தையும், 5 மாத பெண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில், கடந்த 12ம் தேதி இரவு, சுவாமிநாதன் பைக்கில் சென்றபோது, படப்பை அருகே, சாலையில் நடுவே இருந்த கல்லில் மோதி, நிலைதடுமாறி கிழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் அடைந்தார்.

சென்னையில் உள்ள தனியார் மருத்துமனையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம், சுவாமிநாதன் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, சுவாமிநாதனின் உடல் உறுப்புகளை தானமாக வழங்க அவரது குடும்பத்தினர் முன்வந்தனர். அதன்பேரில், சுவாமிநாதனின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன. இதையடுத்து, பெரும்புதுார் ஆர்டிஓ சரணவக் கண்ணன், இறந்த சுவாமிநாதன் குடும்பத்தினரை நேற்று நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். மேலும், அரசு சார்பில் அவரது உடலுக்கு, மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

Related posts

நவீன பயிற்சி கூடம் மற்றும் ஆய்வுக்கூடத்தினை திறந்து வைத்தார் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்!

அதிமுக கவுன்சிலர் பிரபாகரனுக்கு விதிக்கப்பட்ட தடை ரத்து

தெலுங்கானாவில் மேடை சரிந்து கீழே விழுந்த நடிகை.. லேசான காயத்துடன் உயிர் தப்பினேன்: பிரியங்கா மோகன் பதிவு!!