இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் இந்த விசாரணையை கார்ப்பரேட் நிறுவனங்களின் மோசடியை விசாரிக்கும் தீவிர மோசடி தடுப்பு அலுவலகம் ஏற்றுக் கொண்டது. இந்த அமைப்பு சிஎம்ஆர்எல் நிறுவனத்திலும் மற்றும் இந்த நிறுவனத்தின் பங்குகளை வாங்கியுள்ள கேரள அரசின் தொழில் அபிவிருத்திக் கழகத்திலும் விசாரணை நடத்தியது. ஆனால் மோசடி குறித்து வழக்கு பதிவு செய்து 10 மாதங்கள் ஆகியும் வீணா விஜயனிடம் விசாரணை நடத்தப்படவில்லை.
இந்நிலையில் வீணா விஜயனிடம் தீவிர மோசடி தடுப்பு அலுவலகம் விசாரணை நடத்தியுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னையில் உள்ள அலுவலகத்தில் வைத்து வீணா விஜயனிடம் விசாரணை நடந்ததாக கூறப்படுகிறது. சுமார் 5 மணி நேரத்திற்கு மேல் இந்த விசாரணை நடைபெற்றது. இதன்பின் வீணா விஜயனை அதிகாரிகள் விடுவித்தனர். பினராயி விஜயனின் மகளிடம் விசாரணை நடத்தியது கேரள அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.