சென்னை: கல்வராயன் மலைப் பகுதி மக்களுக்கு தேவையான பேருந்து போக்குவரத்து வசதிகளை 4 வாரங்களில் செய்து தர உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. கல்வராயன் மலைப் பகுதி மக்களின் சமூக, பொருளாதார மேம்பாடு தொடர்பாக உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு. சேலம் கோட்டம் சார்பில் கல்வராயன் மலைப் பகுதியில் 2 மினி பேருந்து, விழுப்புரம் கோட்டம் சார்பில் 10 பேருந்துகள் இயக்கம். சேலம் மற்றும் விழுப்புரம் கோட்ட மேலாண் இயக்குநர்கள் காணொலியில் ஆஜராகி விளக்கம் தெரிவித்துள்ளார்.