டெல்லி: டெல்லியில் குடிநீர் பிரச்சனையை தீர்க்க அருகில் உள்ள மாநிலங்களின் அவசர கூட்டத்தை ஜூன் 5ம் தேதி கூட்ட டெல்லி குடிநீர் பிரச்சனையைத் தீர்க்க யமுனை நதி வாரியத்துக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. அரியானா மாநிலத்திடம் இருந்து கூடுதல் நீர் கேட்ட டெல்லி அரசின் மனு மீதான விசாரணை ஜூன் 6-ல் நடைபெற உள்ளது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஜூன் 6-ல் அறிக்கை அளிக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.