நெல்லை: திருநெல்வேலி மாவட்டம், நம்பியாறு நீர்த்தேக்கத்திலிருந்து 19.01.2024 முதல் 31.03.2024 வரை 73 நாட்களுக்கு நாள் ஒன்றுக்கு வினாடிக்கு 60 கன அடிக்கு மிகாமல் நீர்வரத்து மற்றும் நீர் இருப்பை பொறுத்து பிசான பருவ சாகுபடிக்கு தேவைக்கேற்ப தண்ணீர் திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது. இதனால் திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை மற்றும் இராதாபுரம் வட்டங்களில் உள்ள 1745 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.