எம்.ஆர்.விஜயபாஸ்கரின் சகோதரரை சிறையிலடைக்க ஆணை

 

கரூர்: ரூ.100 கோடி நில அபகரிப்பு வழக்கில் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் சகோதரர் சேகரின் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. எம்.ஆர்.சேகரை செப்டம்பர் 25-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையிலடைக்க கரூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கரூரை சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை அபகரித்ததாக வழக்கு தொடரப்பட்டது.

Related posts

மஞ்சூர்-கோவை சாலையில் அரசு பஸ்சை யானைகள் வழிமறித்ததால் பரபரப்பு

ராமேஸ்வரம் தனுஷ்கோடியில் வலசை வரும் பறவைகளை கண்டுகளிக்க 2 தொலை நோக்கியுடன் மரப்பாலக் கூண்டு

பண்ருட்டியில் காடுவெட்டி குரு மகனை தடுத்து நிறுத்திய பாமகவினர்; காவல் துறையுடன் வாக்குவாதம்