ஆர்டர் செய்வதுபோல் நடித்து 4 ஏ.சி மிஷின்கள் அபேஸ்: கடை உரிமையாளருக்கு வலை

தண்டையார்பேட்டை : புது வண்ணாரப்பேட்டை பகுதியில் இயங்கும் தங்கம் என்டர்பிரைசஸ் என்ற கடை உரிமையாளர் தங்கதுரை, கடந்த 16ம் தேதி அம்பத்தூர் எஸ்டேட் பகுதியில் உள்ள எலக்ட்ரானிக்ஸ் கடைக்கு போன் செய்து, 6 ஏசி மிஷின்கள் புதிதாக வேண்டும், என்று கூறியுள்ளார். அதன்பேரில், 6 ஏசி மிஷின்களை எடுத்துக் கொண்டு அந்நிறுவன ஊழியர்கள், நேற்று முன்தினம் புறப்பட்டனர்.
பின்னர், தங்கதுரை கூறியபடி, தண்டையார்பேட்டை திருெவாற்றியூர் நெடுஞ்சாலை எம்.எம் தியேட்டர் எதிரே 4 ஏசிகளை இறக்கி வைத்துள்ளனர்.

மீதமுள்ள 2 ஏசிகளை அவரது கடைக்கு கொண்டு சென்றனர். கடை பூட்டி இருந்தது. தங்கதுரையை செல்போனில் தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதையடுத்து கடை ஊழியர்கள் தண்டையார்பேட்டை எம்.எம் தியேட்டர் பகுதியில் வந்து பார்த்தபோது, அவர்கள் இறக்கி வைத்திருந்த 4 ஏசி மிஷின்கள் மாயமாகி இருந்தது. இதுகுறித்து தண்டையார்பேட்டை குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்துள்ளனர். போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள தங்கதுரையை தேடி வருகின்றனர்.

Related posts

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்

மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்த காகம்: முதல் உதவி செய்து காப்பாற்றிய தீயணைப்பு வீரர் – குவிந்து வரும் பாராட்டு