சென்னை: பல்கலை. உறுப்பு கல்லூரியாக இருந்து அரசு கல்லூரியாக மாறிய கல்லூரிகளில் கவுரவ விரிவுரையாளர் சம்பளத்தை விடுவிக்க உத்தரவு அளித்துள்ளது. அரசு பல்கலை.களில் உறுப்பு கல்லூரிகளாக செயல்பட்ட கல்லூரிகள் நிர்வாகம், நிதி பற்றாக்குறையால் அரசு கல்லூரிகளாக மாற்றம் செய்துள்ளது. அரசு கல்லூரிகளாக மாறிய நிலையில் கவுரவ விரிவுரையாளர்களுக்கு சம்பளம் வழங்குவதில் நிலுவை இருந்து வந்த நிலையில் கவுரவ விரிவுரையாளர்களுக்கான சம்பள பாக்கியை உடனடியாக வழங்க உயர்கல்வித்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்