சென்னை: காலநிலையை சிறப்பாக கையாளுவதில் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு உருவாக அனைவரும் ஓரணியில் உழைக்க வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு காலநிலை இரண்டு நாள் உச்சி மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.