இதுகுறித்து அவர் கூறுகையில், “இந்த சீசனுக்கான ஆரஞ்சு தொப்பியை பெற்றதில் மிகவும் பெருமையடைகிறேன். சீசன் முழுவதும் எனது அணிக்காக நான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விதத்தில் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன், ஆனால் இதனைவிட ஒவ்வொரு போட்டியிலும் எங்கள் அணி வெற்றிபெற வேண்டும் என்பதே மிக முக்கியமானதாகும். ஐபிஎல்லின் 2025 சீசனிலும் இதைப் பிரதிபலிக்க நான் விரும்புகிறேன். உங்கள் ஆதரவிற்கு அனைவருக்கும் நன்றி” என்றார்.