கேரளாவில் நேற்று திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, இடுக்கி ஆகிய 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம் உள்பட 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனால் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. எர்ணாகுளம் மாவட்டத்திற்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. 3 நாட்களுக்கு லட்சத்தீவு பகுதியில் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.