டெல்லி: வட கிழக்கு மாநிலங்களுக்கு 3 நாட்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அசாம், அருணாச்சல் பிரதேசம், மேற்குவங்கம், மணிப்பூர், மிசோரமில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. உத்தராகண்ட், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், ஜார்க்கண்ட், ஒடிசா, சண்டிகரிலும் மழை தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.